ஜேம்ஸ் - வயது 28
மாலை 4 மணி - ஒரு காபி ஷாப்பில்.
ஜேம்ஸ் கையில் ஒரு ரோஜாவுடன் தனது காதலி திவ்யாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறான்.
ஐந்து நிமிடத்தில் திவ்யாவும் காபி ஷாப் வருகிறாள் . அங்கே வந்தவுடன் அங்கிருக்கும் ஜேம்ஸைப் பார்க்கிறாள். பார்த்தவுடன் வந்து அவன் இருக்கும் டேபிளில் அவனுக்கு எதிரே அமர்கிறாள் .
''என்ன ஜேம்ஸ் ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வெச்சிட்டனா.''
''அதெல்லாம் இல்ல திவ்யா, 5 நிமிஷம் தான் வெய்ட் பண்ணேன். காதலர் தினம் அன்னைக்கு காதலிக்காக 5 நிமிடம் கூட வெய்ட் பண்லைனா எப்படி.??''
''நல்லாவே பேசற ஜேம்ஸ்.''
அவளுக்காக வைத்திருக்கும் ரோஜாப் பூவை அவளிடம் கொடுக்கிறான்,ஒரு புன்னகையொடு, திவ்யாவும் ரோஜாப் பூவை வாங்குகிறாள் புன்னகையோடு.
அவள் வாங்கும்போது ஜேம்ஸ் காதல் பார்வையுடன் காதலுடன் சொல்கிறான் ''ஐ லவ் திவ்யா. ஐ லவ் யு''.
அவன் சொன்னதும் திவ்யாவின் முகத்தில் மகிழ்ச்சியும் வெட்கமும் வெளிபடுகின்றன. அதே மகிழ்ச்சியோடு வெட்கத்தோடும் அந்த ரோஜாவை கையில் வாங்குகிறாள் திவ்யா. கையில் வாங்கியவுடன் அவள் ஜேம்ஸின் கண்களைப் பார்த்து ''ஐ லவ் யு டூ ஜேம்ஸ்''.
அவள் சொன்னதும் ஜேம்ஸ்க்கு மகிழ்ச்சிதான். அவளைப் பார்த்து ''உன்னோட காதல் தான் என் வாழ்க்கையை அழகாக்குது.''
''என் வாழ்க்கையையும் ஜேம்ஸ்.''
மெல்ல அவ கையைப் பிடிக்கிறான். ''நீயும் உன் காதல் இல்லாத வாழ்க்கையும் என்னால ஒரு நாள் கூட வாழ முடியாது.''
''என்னாலையும் தான் ஜேம்ஸ். உன்னைப் பார்க்காம பேசாம உன்னை நினைக்காம இருக்க முடியாது.''
''நம்ப காதல் நம்ப இறுதி மூச்சு வரைக்கும் வரனும் திவ்யா.''
''அடுத்த ஜென்மமும் நம்ப காதல் தொடரனும் ஜேம்ஸ்.''
''நீ எனக்கு கிடைப்பனா,நான் எத்தனை ஜென்மம்னாலும் பிறக்க ரெடிதான் திவ்யா.''
''எவ்வளவு தடை வந்தாலும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நம்ப காதலை நீ கை விட்ற மாட்டியே.''
''என்ன திவ்யா இப்படி கேட்கற. உன்னை கைவிட்றதும் என் உயிரை விட்றதும் ஒன்னுதான்.''
''அதேதான் ஜேம்ஸ் எனக்கும், நீ என்னை விட்றது, என் உயிர் என்னை விட்றதும் ஒன்னுதான்.''
''திவ்யா,இப்போ ஏன் இந்த நல்ல நாள்ல நம்ப இப்படி பேசனும். இது காதலர் தினம், நம்ப காதலோட சந்தோஷமா இருக்க வேண்டிய நாள்.''
''சரிதான் ஜேம்ஸ். இருந்தாலும் நம்ப காதலுக்குதான் பலத்த தடை இருக்கே. நம்ப ரெண்டு பேர் பக்கமும். அதுவும் உன் பக்கம் தான் கொடைச்சல் அதிகம்.''
''அந்தத் தடையெல்லாம் நம்ப காதல் தகர்த்து எரியும். நிச்சயமா இந்தத் தடைகள் மட்டும்,எந்தத் தடையாலும் நம்ப காதலை பிரிக்க முடியாது.''
''உண்மைதான் ஜேம்ஸ், நம்ப காதல் உண்மையானது. யாராலும் பிரிக்க முடியாது.''
இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒருவருக்கு மேல் ஒருவர் வைத்திருக்கும் காதலை கண்களில் வெளிப்படுத்துகின்றனர்.
இப்பொழுதுதான் இவர்களின் காதலுக்கான இடையூறு வருகிறது. காதலுக்கான தடை வருகிறது.
ஆம் ஜேம்ஸின் மொபைல் ரிங்க் ஆகுகிறது. ரிங்க் ஆனதுமே திவ்யா கண்டுப்பிடித்து விட்டாள்.
''என்ன ஜேம்ஸ் தடை வந்தாச்சா''
''இரு இரு சீக்கிரம் கட் பண்றேன்.''
கால் அட்டெண்ட் பண்றான்.
''சொல்லு வித்யா. நான் மறக்கல வித்யா. கண்டிப்பா இன்னைக்கு 9 மணிக்கு டின்னர் போர்றோம் .காதலர் தினத்தைக் கொண்டாட்றோம்.''.
காரை ஓட்டிக்கொண்டே மொபைலில் பேசுகிறாள் வித்யா.''அதுக்காகதான் காத்திட்டு இருக்கேன். இந்த நாள் நம்ப டின்னரை மிஸ் பண்ணக் கூடாது, இன்னைக்கு இரவையும் மிஸ் பண்ணக் கூடாது.''
TAMANNA AS VIDHYA -IN THIS SAREE- AGE 28.
''லவ் யூ ஜேம்ஸ்'' கார் ஓட்டிட்டே.
''லவ் யூ வித்யா. 9 மணிக்கு வந்துட்றேன்.''
''ஜேம்ஸ் இன்னைக்கு உன்னை பிரிஞ்சிருக்கவே முடியல. நீ என் கூட இன்னைக்கு இருந்து இருந்தா இன்னும் சந்தோஷப் பட்டு இருப்பேன்.''
''எனக்கும் அந்த ஆசைதான் வித்யா. காதலர் தினம் அன்னைக்கு என் மனைவி உங்கூட இருக்கதான் ஆசை. 9 மணிக்கு வந்துட்றேன். இன்னைக்கு இரவு நமக்குதான்.''
ஆமா ஜேம்ஸின் மனைவிதான் வித்யா. ஜேம்ஸ் வித்யா இருவரும் கணவன் மனைவிகள்.
''காத்துக்கிட்டு இருக்கேன் ஒரு ஒரு நிமிஷமும் இன்னைக்கு 9 மணி ஆக. ''
''நானும் தான்.''
''சரி சீக்கிரம் வந்துரு.'' கார் ஓட்டிக் கொண்டே காலைக் கட் செய்கிறாள் வித்யா.
கால் கட் செய்ததும் திவ்யா ஜேம்ஸிடம் '' என்ன உன் பொண்டாட்டிதானே. நம்பள கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விட மாட்டாளே அவ.''
''என்ன பண்றது 9 மணிக்கு டின்னர் போலாம்னு சொன்னேன். 9 முறை கால் பண்ணுவாப் போல.''
''நம்ப காதலுக்கு இருக்க பெரியத் தடை உன் பொண்டாட்டிதான்.''
''உண்மைதான். ''
''ஆனா அவ உன்னை உண்மையா காதலிக்கிறால.''
''ஆமா வித்யா என்னை உண்மையா விரும்பறா. என்னை மட்டுமே விரும்பறா. இப்பவும் 9 மணிக்காக ஒரு ஒரு நிமிஷமும் காத்துக்கிட்டு இருப்பேன்னு சொன்னா'அதலயும் அவ காதல் தெரியுது.''
''என்னை விட உன்னைக் காதலிக்கிறாளா??''
''இல்லை உன்னை விட இல்ல. உன் அளவுக்கு யாரும் காதலிக்க முடியாது.''
அப்பொழுது அவர்களின் டேபுளுக்கு இரு காபி வருகிறது. திவ்யா வரும் முன்னரே ஆர்டர் செய்து விட்டான் ஜேம்ஸ். வெய்ட்டர் காபி வைத்துவிட்டு சென்று விடுகிறார்.
ஜேம்ஸ் '' திவ்யா. 9 மணிக்கு என் மனைவியைப் பார்க்க போகனும். அதனால சீக்கிரம் கிளம்பலாம். ரூம் புக் பண்ணிட்டேன். 8.30 மணிக்குலாம் நான் கிளம்பிடனும்.''
''புரியுது ஜேம்ஸ் சீக்கிரம் கிளம்பலாம். நம்ப தப்பு பண்ணாலும் உன் மனைவி உன்னை உண்மையா காதலிக்கிறா.அவ உன்னை இப்பவே மிஸ் பண்ணிட்டு இருப்பா.''
''ஆமா. அதுக்காகதான் அவளோட ஆசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கறேன். உன் காதலுக்கு முதல் முக்கியத்துவம் ,அதனாலதான் உன்னை முதல்ல பார்க்கறேன். அடுத்துதான் என் மனைவியோட காதல். ஆனா அவ காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கறேன். அதான் 9 மணிக்கு அவக் கூட இருக்கனும் நான்.''
''புரியுது திவ்யா. சீக்கிரம் கிளம்பிடலாம்.''
இருவரும் காபி குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.
பைக் பார்க்கிங்க் ஏரியாவுக்கு வருகின்றனர். ஜேம்ஸ் பைக்கை ஸ்டார்ட் செய்கிறான். அப்பொழுது திவ்யாவுக்கு கால் வருகிறது.
அவளுக்கு யார் எனத் தெரியும், அட்டெண்ட் செய்து ''சொல்லுங்க மகேஷ்''
''திவ்யா. ராத்திரி 9 மணிக்கு கேக் ஆர்டர் பண்ணிட்டேன். ஸ்பெஷல் டின்னரும் புக் பண்ணிட்டேன். 8.45கு நான் வீட்டுக்கு வந்துருவேன். ''
''புரியுதுங்க. நானும் வந்துட்றேன். நம்ப கல்யாணத்துக்கு அப்பறம் நம்ப கொண்டாடப் போற முதல் காதலர் தினம் இது.''
ஆம் திவ்யாவிற்கும் திருமணம் ஆகிவிட்டது. அவளின் கணவன் தான் மகேஷ்.
''ஆமா இந்த காதலர் தினம் நமக்கு ஸ்பெஷல் தான் திவ்யா''
''நம்ப இன்னும் ஸ்பெஷல் ஆக்கிடலாம்.''
''உனக்காக ஒரு ஒரு நிமிஷமும் காத்துக்கிட்டு இருக்கேன் திவ்யா.''
''நானும் தான் மகேஷ். சீக்கிரம் வந்துட்றேன்.''
''லவ் யூ திவ்யா'' அப்படியே முத்தம் கொடுக்கறான் மொபைல்ல.
திவ்யா புன்னகையுடன் முத்தத்தைப் பெற்றுக் கொண்டு. ''லவ் யூ டூ மகேஷ்.''
''சீக்கிரம் வா''
''வந்துட்றேங்க.''
புன்னகையோட கால் கட் செய்து விடுகிறான் மகேஷ்.
கால் கட் செய்ததும் ஜேம்ஸ் திவ்யாவிடம் ''யாரு உன் பக்கம் இருக்க நம்ப காதலுக்கான தடையா''
''ஆமா என் ஹஸ்பண்ட் தான்.ஆனா அவரும் என்னை உண்மையாதான் காதலிக்கிறார்.நானும் தான் அவரை. ஆனா உன்னைதான் அதிகம் காதலிக்கிறேன். உன்னோட காதலுக்குதான் முதல் முக்கியத்துவம்.''
''எனக்கு தெரியும் திவ்யா. உன் புருஷன் நினைச்சாலும் சரி, என் பொண்டாட்டி நினைச்சாலும் சரி.நம்ப காதலைப் பிரிக்க முடியாது.''
''கரெக்ட்டா சொன்ன ஜேம்ஸ்.''
''சரி, சீக்கிரம் போலாம் திவ்யா.''
''ஆமா ஜேம்ஸ். நானும் 9 மணிக்குள்ள வீட்டுக்குப் போய்டணும். புரியும்னு நினைக்கறேன்.''
''புரியுது திவ்யா.ஏறி உட்காரு கிளம்பலாம்.''
திவ்யா ஜேம்ஸின் பைக்கில் ஏறி அமர்கிறாள். ஜேம்ஸ் பைக் ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பிவிடுகிறான். திவ்யா ஜேம்ஸ் இருவரும் கேம்ஸ் ரூம் புக் செய்து இருக்கும் லாட்ஜ் க்கு செல்கிறார்கள்.
மறுபுறம் வித்யா. ஜேம்ஸின் மனைவி.
காரில் பயணித்து காலில் பேசிய வித்யாதான், அவள் பயணித்துக் கொண்டிருப்பது ECR சாலையில். அங்கே இருக்கும் ஒரு கெஸ்ட் ஹவுஸ்க்குள் காரை நுழைத்து நிறுத்துகிறாள்.
காரில் இருந்து இறங்கி சென்று காலிங்க் பெல் அடிக்கிறாள் வித்யா.
கதவை வந்துத் திறப்பவன் அஜய். வயது 24. பணக்காரப் பையன். வித்யாவை விட நாலு வயது சிறியவன்.
''வா வித்யா, வா உள்ள வா'' சந்தோஷமா வரவேற்கிறான் அஜய்.
வித்யாவும் புன்னகையோடு உள்ளே நுழைகிறாள்.
''நீ வர மாட்டனு நினைச்சேன் வித்யா.''
''நிறைய யோசிச்சேன் .எனக்கும் உன்னைப் பிடிச்சிது.அதான் வந்துட்டேன்.''
''நான் என்னொட காதலை உங்கிட்ட சொல்லிட்டு, உனக்கும் இந்தக் காதலுக்கும் சம்மதம்னா FEB 14 கெஸ்ட் ஹவுஸ் வானு சொல்லிட்டேன்.ஆனா நீ வரமாட்டேனுதான் நினைச்சேன்.''
''நானும் வர மாட்டேனுதான் நினைச்சேன் அஜய். ஆனா எனக்கேத் தெரியாம, என்னை உனக்குப் பிடிச்சிடிச்சி. அது காதல்னு புரிஞ்சிகிட்டேன் அதான் வந்துட்டேன்.''
அஜய் வித்யாவின் அருகே நெருங்கி வந்து அவள் கண்களைப் பார்த்து.
''ஐ லவ் யூ''
வித்யா அவன் கையைப் பிடித்து அவன் கண்களைப் பார்த்து.
''லவ் யூ டூ.''
அவனும் அவளின் கையைப் பிடிக்கிறான்.
மீண்டும் சொல்கிறான் அவள் கண்களைப் பார்த்து ''ஐ லவ் யூ.''
''லவ் யூ டூ''
அஜய் FRIDGEல் இருக்கும் கூல் ட்ரிங்க்ஸை எடுத்துக் கொடுக்கிறான்.
வித்யா அதை வாங்கிக் கொண்டு ''8.30கு நான் கிளம்பிடனும்.''
''புரியுது திவ்யா. சீக்கிரம் பண்ணிடலாம்,சிறப்பா பண்ணிடலாம்.''
புரிந்துக் கொண்ட வித்யா ஒரு புன்னகை செய்து விட்டு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறாள்.
அஜயும் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கின்றான். வித்யா அஜயின் கள்ளக்காதல் இந்த காதலர் தினத்தில் இனிதேத் தொடங்குகிறது.
ஜூஸ் குடித்து முடித்தவுடன் இந்த BOUQUETஐ வித்யாவிற்கு கொடுக்க வித்யாவும் புன்னகையோடு வாங்கிக் கொள்கிறாள்.
இப்பொழுது மகேஷின் வீட்டில். அதவாது திவ்யா வீட்டில்.மகேஷ் திவ்யா வீட்டில்.
மகேஷ் ஜூஸ் ரெடி செய்து இரண்டு க்ளாஸ்களில் ஜூஸை ஊற்றி முடிக்கவும்.காலிங்க் பெல் சத்தம் கேட்கவும் சரியாக இருக்க, மகேஷ் சென்று கதவைத் திறக்க வெளியே நிற்கும் கீர்த்தி புன்னகையுடன் மகேஷை பார்க்கிறாள். கீர்த்தி சுரேஷ்- கீர்த்து-வயது 28. மகேஷின் வயது 30.
''உள்ள வா கீர்த்தி.''
''உன் பொண்டாட்டி திவ்யா இல்லல''
''இல்ல ராத்திரி 9 மணிக்குதா வருவா.''
''நல்லா தெரியும்ல அப்பறம் நீ மாட்டிக்கப் போற.''
''அதெல்லாம் மாட்டிக்க மாட்டேன்.எனக்கு நல்லாத் தெரியும்.நீ உள்ள வா கீர்த்து.''
ஒரு கள்ளப் புன்னகையுடன் உள்ளே நுழைகிறாள் கீர்த்து. அவள் நுழைந்ததும் க்ளாஸில் இருக்கும் ஜூஸை அவளிடம் கொடுக்கிறான் மகேஷ்.ஆம் அவளுக்காக தயார் செய்ததுதான்.இருவரும் ஜூஸ் குடித்தவுடன் ஒரு மோதிரத்தை காதலர் தினப் பரிசாக தன் கள்ளக் காதலி கீர்த்துக்கு கொடுக்கிறான்,அவள் விரலில் போட்டு விடுகிறான். கீர்த்தியும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறான்.மோதிரம் போட்டவுடன் கீர்த்தி மகேஷிடன்,
''லவ் யூ'''ஐ லவ்யூ''
''ஐ டூ லவ் யூ''
Comments
Post a Comment